உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஜோதிமணி மீது காட்டமா?

ஜோதிமணி மீது காட்டமா?

கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கீழப்பழுவஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது திறந்த வாகனத்தில் நின்று பேசிய அவர், 'கை சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்' எனக் கூறி, அங்கிருந்த வாக்காளர்களிடம் தனது கையை உயர்த்தி காட்டினார்.அப்போது, அவரது அருகில் இருந்த அன்னவாசல் ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரன், கை சின்னத்திற்கு பதிலாக, இரட்டை விரலை அசைத்து காட்டி ஓட்டு சேகரித்தார்.இதைக் கண்ட அமைச்சர் மெய்யநாதன் பதறி போய், சந்திரன் கையை தட்டிவிட்டு, கை சின்னத்தை காட்டுமாறு கண்டித்தார். சுதாரித்த சந்திரன் கையை அசைத்து, ஓட்டு சேகரித்தார்.காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், 'உண்மையில் சந்திரன் இரட்டை விரலை காட்டியது எதார்த்தமா அல்லது ஜோதிமணி மீதான காட்டமா...?' என, புலம்பியபடி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

angbu ganesh
ஏப் 19, 2024 13:43

என்ன செய்ய


M Ramachandran
ஏப் 19, 2024 10:04

ஜூன் மாதம் தினத்திற்கு பிறகு பார்ப்போம் கரூர் மக்கள் எண்ண ஓட்டத்தை


D.Ambujavalli
ஏப் 19, 2024 06:41

மாம்பழத்துக்கு பதில் ஆப்பிள் காட்டியது போல இரட்டை விரல்


J.V. Iyer
ஏப் 19, 2024 06:27

இவர்கள் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் இருந்தால் என்ன செய்வது ? டாஸ்மாக் மதுவா, போதையா?


புதிய வீடியோ