செங்கல்பட்டு: புகார் பெட்டி;சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்
சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கப்படுமா?
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பகுதியில், கூவத்துார் - மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அதிக அளவில் பைக், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில், பகல் நேரங்களில் மாடுகள் கட்டுப்பாடின்றி திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - பி.சிவா, பவுஞ்சூர்.