உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி.:சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அபாயம்

புகார் பெட்டி.:சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அபாயம்

சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அபாயம்

சூணாம்பேடு பகுதியில் இருந்து திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. சூணாம்பேடு ஏரிக்கரை அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், சாலை நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வ.சேகர், வில்லிப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி