உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி மேம்பால படிக்கட்டுகளில் குப்பையை அகற்ற வேண்டும்

புகார் பெட்டி மேம்பால படிக்கட்டுகளில் குப்பையை அகற்ற வேண்டும்

மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி., சாலையில், பயணியர் சாலையைக் கடக்க நெடுஞ்சாலைத் துறை சார்பில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தின் படிக்கட்டுகளில் குப்பை அதிக அளவில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் இந்த மேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். இதனால், இரவு நேரங்களில் பயணியர் இந்த மேம்பாலத்தின் வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இந்த நடைமேம்பாலத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'குடி'மகன்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ப.ஆனந்தன், மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை