புகார் பெட்டி : புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து
புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட அபிராமபுரம் வாரன் சாலை, ஆழ்வார்பேட்டை சேஷாத்திரி உள்ளிட்ட சாலைகளில் உயரழுத்த மின் வடம், திறந்த வெளியிலும், நடைபாதையிலும் கிடக்கின்றன.இவற்றை பூமிக்கு அடியில் புதைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன், மின் வாரியத்தினர் உயர் அழுத்த புதை மின் வடத்தை பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தாமரேசன், ஆழ்வார்பேட்டை.