உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்

புகார் பெட்டி வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்

வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்

தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அபிராமபுரம் 1வது தெரு உள்ளது. இத்தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை மூடி சிதிலமடைந்து, சாலையில் பள்ளம் ஏற்பட்டது.அவற்றை சீரமைக்கக்கோரி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை.இதனால் கடந்த மூன்று நாட்களில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஐந்து பேர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் பாதாள சாக்கடை மூடியை, குடிநீர் வாரியத்தினர் சீரமைக்க வேண்டும்.- புனிதவேலு ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !