புகார் பெட்டி
மாசு அடையும் ஏரி எலவனாசூர்கோட்டை புறவழி சாலையோரம் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர் மாசடையும் சூழல் உருவாகி உள்ளது. -செல்வம், எலவனாசூர்கோட்டை. உலர் களமாகிய சாலை கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைகளை உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். -கண்ணன், தச்சூர். டிராபிக் ஜாம் கள்ளக்குறிச்சியில் பிரதான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. -கண்மணி, கள்ளக்குறிச்சி.