/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; துார்ந்த நிலையில் வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி ; துார்ந்த நிலையில் வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
துார்ந்த நிலையில் வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சி, 20வது வார்டு, தும்பவனம் சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் குப் பை, கட்டட கழிவுகளால் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பருவமழைக்காலத்தில் பெரிய அளவில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே, தும்பவனம் சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.தாமோதரன்,- காஞ்சிபுரம்.