உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பகலிலும் ஒளிரும் தெரு விளக்கு ஊராட்சி நிதி வீணடிப்பு

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பகலிலும் ஒளிரும் தெரு விளக்கு ஊராட்சி நிதி வீணடிப்பு

பகலிலும் ஒளிரும் தெரு விளக்கு ஊராட்சி நிதி வீணடிப்பு

காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சியில் உள்ள தெருக்களுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், சஞ்சீவிராயர் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தெரு மின் விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பகலிலும் தெரு மின் விளக்குகள் தொடர்ந்து ஒளிர்கிறது.இதனால், மின்சாரம் விரயமாவதுடன், ஊராட்சி நிர்வாகம், மின்வாரியத்திற்கு கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஊராட்சி நிதியும் வீணாகிறது.தெரு மின் விளக்குகளும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது. எனவே, தெரு மின் விளக்குகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும்.- கே.ரஜினிகாந்த்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி