வங்கதேச தம்பதி கைது
திருப்பூர்:திருப்பூரில் வங்கதேச தம்பதி கைது செய்யப்பட்டனர்.திருப்பூர், கே.செட்டிபாளையம் பகுதியில் நல்லுார் போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். அங்கு வசித்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த மொதிர் ரகுமான், 37, அவரது மனைவி அஞ்சனா அக்தர், 35 ஆகியோரை கைது செய்தனர். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், 11 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்ததும், உரிய ஆவணங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது.