தகவல் சுரங்கம் : இரட்டை கோபுரம் நினைவு தினம்
தகவல் சுரங்கம்இரட்டை கோபுரம் நினைவு தினம்அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 2001 செப்.11ல் அமெரிக்க விமானத்தை கடத்திய அல் குவைதா பயங்கரவாதிகள் இரட்டை கோபுரம் மீது மோத செய்தனர். 2 மணி நேரத்துக்குள் மொத்த கட்டடமும் தரைமட்டமானது. இரண்டு விமானங்களில் இருந்த 147 பயணிகள், வணிக மைய கட்டடத்தில் இருந்த 2606 பேர் பலியாகினர். தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் 2011ல் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது அமெரிக்கா படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.