தகவல் சுரங்கம் : மாசுபாடு அதிகமுள்ள நகரம்
தகவல் சுரங்கம்மாசுபாடு அதிகமுள்ள நகரம்தலைநகர் டில்லியில் காற்றுமாசு அதிகமாக இருக்கிறது. டில்லியை விடவும், நாட்டில் மாசுபாடு அதிகமுள்ள நகராக, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் பைரினிஹாட் உள்ளது. இந்நகரின் நிலத்தடி நீரில், குரோமியம், ஈயம் உள்ளிட்ட தாதுக்கள் நிர்ணயிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருக்கிறது. இங்கு செயல்படும் 80க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளே இதற்கு காரணம். மேலும் மேகாலயா - அசாம் எல்லையில் இருப்பதால் அதிக வாகன போக்குவரத்துமே இதற்கு காரணம் என குறிப்பிடப்படுகிறது. இதனால் கண் அரிப்பு, தோல் தடிப்பு, காசநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.