உள்ளூர் செய்திகள்

நன்னீர் ஊற்றுகள்!

ஒன்றிணைந்த ரஷ்யாவிலிருந்து, 1999ல் பிரிந்த அர்மீனியா நாட்டில், 1,500 இடங்களில், நன்னீர் ஊற்றுகள் காணப்படுகின்றன. இயற்கை வளம் நிறைந்த இந்நாட்டில், தண்ணீர் பஞ்சம் இல்லவே இல்லை.ஒரு காலத்தில், ஊற்றுகளில் இருந்து வழியும் தண்ணீர், மக்கள் தேவைக்கு போக மீதமுள்ளவை, வீணாக சாலையில் வழிந்தோடியதாம். 1920ம் ஆண்டுக்கு பின், இந்த ஊற்றுகளில் வழியும் தண்ணீரை குழாய்கள் மூலம் முறைப்படுத்தி, தண்ணீர் வீணாவதை தடுத்துள்ளது, அரசு.அதன்படி, ஊற்று உள்ள இடங்களில் பெரிய தொட்டி அமைத்து, ஊற்று நீரை குழாய்களில் வரும்படி செய்துள்ளனர். தேவையானோர், இந்நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.படத்தில், பெண் ஒருவர், ஊற்று நீர் குழாயை திறந்து, தன் தாகத்தை தீர்த்துக் கொள்வதை காணலாம்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !