உள்ளூர் செய்திகள்

வீட்டுக்குறிப்பு!

கல் வைத்த கம்மலில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, இட்லி பாத்திரத்தில், 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், கம்மலில் இருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்* தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால், ஏதேனும் பற்பசையைத் தடவி, பிரஷால் தேய்த்தால், அழுக்கு நீங்கி, புதிது போல மின்னும்* கண்ணாடி டம்ளர்கள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து எடுக்க வராவிட்டால், கீழ் டம்ளரை கொதிநீரில் வைத்து, மேலுள்ள டம்ளரில் மிகக் குளிர்ந்த நீர் ஊற்றி, சிறிது நேரம் கழித்து, மேல் டம்ளரை இழுத்தால் எளிதாக வந்துவிடும்* துாபக்காலில் நெருப்பு துண்டங்களை போட்டு, அதன் மீது கிராம்பு துாளை துாவவும். அந்த புகைக்கு ஈக்கள் ஓடிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !