கவிதைச்சோலை! - ஊரார் குறைகளை அடுக்கும் முன்...
வீதியெல்லாம் குப்பையெனவாய் கூசாமல் கூறும் முன்வீட்டில் கூட்டிய குப்பையைவீதியில் வீசியெறிவதைமுதலில் நிறுத்துங்கள்!தடை செய்த நெகிழிப் பைகள்தாராளமாய் புழங்குவதாகபுலம்புவதற்கு முன்பூ வாங்க, பழம் வாங்கநெகிழி பை கேட்பதைமுதலில் நிறுத்துங்கள்!குடி குடியைக் கெடுக்குமெனஉபதேசம் செய்யும் முன்'மேலை நாகரிகம்' எனகுடித்து மகிழ்வதைமுதலில் நிறுத்துங்கள்!லஞ்ச லாவண்யம்நாட்டில் பெருகி விட்டதாய்'கமென்ட்' அடிக்கும் முன்பேசியதை நைசாய் போடமேஜை டிராயர் திறக்கும்ஆதி கலாசாரத்தைமுதலில் நிறுத்துங்கள்!'பொம்பளப் பொறுக்கி'களைபொதுவாய் துாற்றும் முன்வக்கிரப் பார்வையால்பெண்களை சுவீகரிப்பதைமுதலில் நிறுத்துங்கள்!மேலதிகாரிகள், எரிந்து விழும்சிடுமூஞ்சிகளென ஏசும் முன்மனைவியிடமும், குழந்தைகளிடமும்'சிடுசிடு'வென விழுவதைமுதலில் நிறுத்துங்கள்!ஊரார் குறைகளை அடுக்கும் முன்அவரவர்களிடம் உள்ள குறைகளைமுதலில் கண்டு களையுங்கள்!சாய், சென்னை.