உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மன்னியுங்கள் அப்பா!* அன்றைய நிகழ்வுகள்இன்றும் முழுமையாய்பசுமரத்தாணி போல்நினைவுகளாய் பதிந்திருக்கிறது!* சுண்டு விரல் பிடித்துதெரு இறங்குகையில்நண்பனாகத்தான் தெரிவார்என் அப்பா!* புத்தகங்களைப்புரிய வைப்பதில்கதைகளாய் நீளுமவர்வார்த்தைகள்!* சிக்கனம் என்றாலேசொல்லிலும்செயலிலும் தேவைஇக்கணம் என்பார்!* சுத்தத்தில் சுகம் காணும்சூத்திரம் சொல்லும் போதுசத்தமாய் கத்தத் தோன்றும்இவர் என்அப்பாவாக்குமென்று!* அவரின் ஆறடி உயரத்தைஅரையடியாக்கி, முதுகில்குதிரை ஓட்டுகையில்மூட்டு வலியை மட்டும்முனகலிலும் சொன்னதில்லை!* குதிரை சவாரிசைக்கிளாக மாறிய போது...எனது பாவாடை சட்டையும்சுடிதார், ஜீன்ஸ் ஆனது!* எனது நிறம் பொருந்தியஆடைத் தேர்வில்மேட்சிங் அணிகலன்களிலெனஅப்பாவின் பங்குஐம்பது கடைகள் தாண்டும்!* 'சுற்றமும் நட்பும் சூழ' எனஎனதழைப்பிதழைப்படிக்கும் போது மட்டும்ஏனோ எனக்குத் தெரியாமல்விழி ஈரம் துடைக்கும் அப்பா!* மாதமொருமுறை என்வீடு வந்து திரும்பும் போது'எல்லாம் நன்றாகத்தானேபோய் கொண்டிருக்கிறது'என ஆயிரத்தொன்றாவதுமுறையும் சளைக்காமல்என் பார்வைகளில்பதில் தேடும் அப்பா!* எந்தப் பிரச்னைகளுக்கும்பொறுமையில் வழி தேடிநிதானத்தில் வெற்றிகொள்ளச்சொல்லும் என் செல்ல அப்பா!* வயதான உங்கள்தேவைகளை கேட்கத் தவறியதால்முழுவதும் தவறவிட்டுஇப்போது விழிநீரில்பரிதவிக்க வைக்கும்அன்பு அப்பா எங்களைமன்னிப்பீரா அப்பா!— எஸ்.ரகு, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !