கவிதைச்சோலை
விதிவிலக்கு!அம்மா தாயே என விளித்துவிரல் நீட்டிபிச்சை கேட்கிறார்முதியவர் ஒருவர் வீதியில்!அனாதை குழந்தைகளுக்குஉடைகளை தானம் வேண்டிவீட்டின் கதவை தட்டுகிறாள்நலிந்த பெண்ணொருத்தி!நிதி வேண்டிஉண்டியலை குலுக்கிநீட்டுகிறான்கட்சித் தொண்டனொருவன்!கோவிலுக்குகாணிக்கை செலுத்தும்படிசீட்டை சிரத்தையாய் நீட்டுகிறான்பக்தனொருவன்!நாடுகள்ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுபிச்சைகளைஉறுதி செய்து கொள்கின்றன!என்னை மட்டும் ஏன்விதி விலக்காய்இருக்கச் சொல்கிறாய்உன் அன்பைஅடைகாத்துக் கொண்டு!— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.