கவிதைச்சோலை!
இருந்தால் கொடுங்கள்!அம்மாக்களே...மனதைப் புண்படுத்தாமல்அனைவரையும் அரவணைக்கதிகட்டாத அன்பைக் கொடுங்கள்!அப்பாக்களே...நல்ல மனிதத்துடன்தரணி போற்ற வாழஉயர்ந்த பண்பைக் கொடுங்கள்!ஆசிரியர்களே...உலகை ஜெயித்துதாய்நாட்டின் பேர் காக்கஅறிவுடன் அடக்கத்தைக் கொடுங்கள்!உறவினர்களே...மகிழ்ச்சி, துக்கம்எல்லாவற்றிலும் உடனிருக்கஅகலாத நம்பிக்கையைக் கொடுங்கள்!நண்பர்களே...வாழ்வின் எல்லாவற்றையும்காலம் கடந்து பேசபசுமையான நினைவைக் கொடுங்கள்!— மருதாணி, சென்னை