கவிதைச்சோலை!
சுமைகள் சுமக்கும் பெண்மைக்கு!சுமைகள் சுமக்கும் உன்னைசுமையாய் நினைக்கிறதுவையம்!சுற்றும் வையத்தின்மையம் நீ எனும்சூட்சமம் அறியாதவன்!உலகம்உன்னைச் சுற்றுகிறதுநீயோதலை சுற்றி தள்ளாடுகிறாய்!சுழலும் சக்கரத்தின்அச்சாணி நீ...உன் அச்சு முறிந்தால்அத்தனையும் அம்போ!நீ அறியாதபடிபீலிபை ஏற்றுவதாய் ஏமாற்றிபெரும் பாரம் ஏற்றுகின்றனர்...நீயோகோவர்த்தனகிரி தாங்கும்கோபாலன் என்று குதுாகலிக்கிறாய்!உன்னைபாதியாய் செதுக்கிஅர்த்தநாரி என்கின்றனர்...நீஅர்த்தம் புரியாமல்ஆனந்திக்கிறாய்!பெண்ணை மட்டும்வழுக்கி விழ வைக்கிறதுபாசம்...அது, தண்ணீரில் அல்லகண்ணீரில்கபடமாய் மறைந்திருக்கிறது!உன் பலம் புரியாதது தவறில்லை...யானைக்கும்தன் பலம் தெரிவதில்லை!பெண்ணே... இனியும்பலவீனங்களைபுரியாமல் இருந்தால்...உன்னை உலகம்சுகமாக வாழ வைக்காது...புது சரித்திரம் படைக்கவீறு கொண்டு எழு!எஸ். விஜயலட்சுமி, கடம்பூர்.