உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஜூன் 20 தந்தையர் தினம்தாயுமானவர்!என் பிரம்மன் அவர்என் அன்னையின் மன்னன் அவர்!தாயின் கருவறை ஸ்பரிசத்தைமார்பிலும், தோளிலும்உணரச் செய்ததாயுமானவர்!எங்கள் வாழ்வில்பசுமை தங்கவாழ்நாள் முழுதும்சுமை தாங்கியாகசுழலும் அன்பு சக்கரமவர்!சில நேரங்களில்கண்டிப்பு அதிகமாய் இருக்கும்பல நேரங்களில்கனிவு அதீதமாய் இருக்கும்!அக்கறையை அனைவரிடமும்சமமாய் பகிர்ந்தளிக்கும்நியாய தராசு அவர்!படிப்பறிவை தாண்டிய பட்டறிவால்பேரறிவை வழங்கிய ஆசான் அவர்!தான் நடந்த பாதையின்முட்கள் அகற்றிநான் நடக்க ஏதுவாய்பூப்பாதையாய் மாற்றிஉலகத்தை காட்டியவர்!அவர் வியர்வையின் வாசமேஎன் சுவாசத்தின் மணம் கூட்டி!உப்பு படிந்த சட்டையுடனும்களைப்பில் சிவந்த கண்களுடனும்நாள்தோறும் நான் கண்டஎன் நிஜ கதாநாயகனவர்!இந்நிலை நான் உயரஎந்நிலையிலும் தன்நிலை உயர்த்த விரும்பாஉன் விரலே என் ஆதாரம்!முப்பிறவியில் எத்தவம் செய்தேனோஇப்பிறவியில் எந்தையாய் நீ கிடைக்கஎப்பிறவியாயினும் உன் மகவாய்நான் பிறப்பேன்...உன் வழிதனில் நான் நடப்பேன்...உன் பெயர் சொல்லும் பிள்ளையாக!தமிழ்கவி சுவாசன், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !