உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பார்வை மாறினால் போதுமே!* வருத்தத்தைப் போக்கவழியா இல்லை...பிரச்னைகள்யாருக்கு இல்லை!* அவை —நிழலாய் தொடரும்நிதர்சனம்!* பயப்படுத்தும்பல்வேறு விஷயங்களைபட்டியலிட்டால்...பிரதான இடத்தைப்பிடிப்பது பிரச்னை!* பிரச்னைகள்வாழ்க்கைக்குவருத்தம் தருவனவல்ல...அர்த்தம் தருவன!* உப்பு —ஒரு துளி குறைந்தால் கூடஉணவு சுவைப்பதில்லை...பிரச்னை இல்லாவிட்டால்வாழ்வதில்பெருமை என்ன இருக்கிறது!* பிரச்னைகளைபிரச்னைகளாகப் பார்ப்பதை விடுத்துஅவற்றை­சவால்களாய் சந்திப்போம்!* சவால்களையாராவதுபிரச்னைகளாய் நினைப்பரா?* பயம் —ஒரு மாயக் கண்ணாடிஅது —மனதில் இருக்கிறவரைஉண்மை நிலையைஉணர முடியாது!* பயத்தைத் தூக்கி எறிந்துபார்வையில்மாற்றம் நிகழ்த்தினால்...பார்க்கப்படும் பொருள்தானே மாறும்!— பத்மநாபன், காரமடை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !