உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

பிரிவு!* நீ எதைத் தந்தாலும்மறுக்காமல்வாங்கிக் கொள்வேன்...ஆனால், இப்போதுபிரிவைத் தருகிறாய்...எங்ஙனம்தாங்கிக் கொள்வேன்!* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது!* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள்சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு!* என் இதயத்தைஅரித்துக் கொண்டிருக்கும்உன் நினைவுகள்கரையான்களை விடபயங்கரமானவை!* ரிப்பனை வெட்டிவிட்டுபுதிய கடைக்குள்நுழைவது மாதிரி,என்னை வெட்டி விட்டுபுதிய வாழ்க்கைக்குள்நீயோ நுழைந்து விட்டாய்!* என்னைப் பற்றியகரைகள் ஏதேனும் உன் வீட்டிலோ,உன் இதயத்திலோஇருந்தால் தயவு செய்துசுத்தப்படுத்தி விடு!* பூங்காவில்சிரித்துக் கொண்டிருக்கும் பிற காதலர்களின்சிரிப்பாவது - இனிகாப்பாற்றப்படட்டும்!* பிடிவாதக்காரியென்பதுசரியாகத்தானிருக்கிறதுஇறங்க மறுக்கிறாயே - என்இதயத்தை விட்டு!* எனக்குநினைவு தெரிந்தநாளிலிருந்து இப்போது தான்முதன் முறையாய்அழுகிறேன்...காதல் தோல்வியால்!* நான் ஒவ்வொரு முறையும்தற்கொலைசெய்து கொள்ளவிரும்புகிற போதெல்லாம்எப்படியாவது அதுதடைப்பட்டு போகிறது!* புரிந்து கொண்டேன்இனியவளே...நீ வெறுத்தஇந்த உயிரை மரணமும் வெறுக்கிறது!— ஆர்.நாகராஜன், திருமங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !