புல்லட்டில் பறக்கும், கஞ்சா வியாபாரி!
படத்தில் உள்ள இளம்பெண், கேரள மாநிலம், கண்ணுாரைச் சேர்ந்த, நிகிலா. இவர், புல்லட் ஓட்டி செல்வதை வியப்புடன் பார்ப்பர், சிலர். இவர், அடிக்கடி கண்ணுாரில் இருந்து பெங்களூரு போய் வருவதுண்டு.நண்பர்களால் போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், இப்போது, போதைப் பொருள் வியாபாரி ஆகிவிட்டார். ஒவ்வொரு முறை பெங்களூரு போய் திரும்பும் போது, சக்திவாய்ந்த போதை பொருட்களை எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வந்தார். சமீபத்தில், இவர் போலீசாரிடம் சிக்கி, இப்போது சிறையில் இருக்கிறார்.ஜோல்னாபையன்