உள்ளூர் செய்திகள்

322 சென்னை குடிநீர் வாரியத்தில் காலியிடங்கள்

சென்னையிலுள்ள மக்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சென்னை மெட்ரோபாலிடன் வாட்டர் சப்ளை அண்டு சூவேஜ் போர்டு தலையாய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பில் காலியாக உள்ள நான்குவிதமான இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள்: டெபுடி கன்ட்ரோலர் ஆப் பைனான்ஸ் பிரிவில் 6ம், சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பிரிவில் 3ம், சிவில்/மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவுகளில் முறையே 113 மற்றும் 45ம், ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவில் 155ம் காலியிடங்கள் உள்ளன.வயது: விண்ணப்பதாரர்கள் 01.07.2017 அடிப்படையில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவினருக்கு உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் உள்ளன. அவற்றை அறிய இணையதளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி: இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 500 ரூபாய்.கடைசி நாள்: 2017 மார்ச் 6.இணையதள முகவரி: www.chennaimetrowater.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !