காட்டுப்பாக்கத்தில் மீன் வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கிவருகிறது.இங்கு, டிச.,17ல் பயோ பிளாக் தொழில் நுட்ப முறையில், மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படஉள்ளது. இந்த பயிற்சிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள்மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்குதலைவர், முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலையம்,காட்டுப்பாக்கம்.99405 42371