உள்ளூர் செய்திகள்

மல்லிகை விவசாயிகள் கவனத்திற்கு

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயிகள் சிறப்பாக மல்லிகை சாகுபடி செய்து விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.உங்கள் மல்லிகைப் பயிரில் பூ மொட்டுகள் பழுப்பு நிறமடைந்திருக்கின்றனவா? பாதித்த மலர் கொத்துக்களை வளைத்து ஒரு வெள்ளை நிற அட்டையில் தட்டுங்கள். உற்று நோக்கினால், மிகச்சிறிய மெலிந்த பழுப்பு மற்றும் மஞ்சள் நிற பூச்சிகள் விரைந்து நகர்வதைக் காணலாம். இப்பூச்சிகள் மலர்ப்பேன்கள் எனப்படும். இப்பூச்சிகளின் தாக்குதலால் பூ மொட்டுகள் வெண்மை நிறம் மாறி பழுப்பு நிறமடையும். மலர்க்காம்புகள் சிறுத்துவிடும். மேலும் மலர்ப்பேன் தாக்கிய மொட்டுகள் மலர்ந்து விரிவதில்லை. எனவே இவை சந்தையில் குறைந்த விலைக்கே போகும்.தெளிப்புநீர் பாசன முறையில் பாசன வசதிபெறும் மல்லிகைப் பயிரில் மலர்ப்பேன் தாக்குதல் மிகக் குறைந்து காணப்படும்.சமச்சீரான அளவில் பரிந்துரைக்கப்படும் விகிதத்தில் உரங்கள் இடப்பட்ட பயிர் பூச்சிகளின் சேத்தினை தாங்கி வளர இயலும். மல்லிகை பயிருக்கு ஆண்டுக்கு இரு தடவையாக அதாவது கவாத்து செய்தவுடன் ஒரு முறையும், ஜூன், ஜூலை மாதங்களில் மறுமுறையுமாக இரு தடவைகளாக கீழ்க்கண்ட உரங்களைப் பிரித்து இடவேண்டும். செடி ஒன்றுக்கு நன்கு மக்கிய தொழு உரம் பத்து கிலோ, தழைச்சத்து 60 கிராம் (யூரியா 130 கிராம்), மணிச்சத்து 120 கிராம் (சூப்பர் பாஸ்பேட் 750 கிராம் அல்லது ஸ்பிக் டி.ஏ.பி.300 கிராம்), சாம்பல் சத்து 120 கிராம் (மியூரியேட் ஆப் பொட்டாஷ் 200 கிராம்) வீதம் தேவை.வசதிப்படும் இடங்களில் தெளிப்புநீர் பாசன முறையில் (ஸ்பிரிங்க்ளர் இர்ரிகேஷன்) வறண்ட வெப்பமான மாதங்களில் மட்டும் பாசனம் ஏற்படுத்தலாம்).மலர்ப்பேன் தாக்குதல் தீவிரப்பட்டால் மோனோகுரோட்டோபாஸ் என்ற மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் முழுவதும் நனையும்படி மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். மேலும் மருந்து கரைசல், பயிரில் குறிப்பாக பூங்கொத்துக்களில் நன்கு படுவதற்காக, வேளாண்மைக்கான திரவ தெளிப்புகளில் (சாண்டோவிட், ஸ்டிக்கால், அக்ரோவெட், ஹைவெட் பைட்டோவெட், இண்ட்ரான் - வணிகப் பெயர்கள்) ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லிவீதம் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஒரு வார இடைவெளியில் மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும்.செஞ்சிலந்தி தாக்குதல்: பாதிப்பு முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றி பின்னர் இளம் இலைகளுக்கு பரவும். மஞ்சள் நிறப்புள்ளிகளை போல் இலைகளின் மேற்புறம் ஏற்படும். பாதிக்கப்பட்ட இலை களின் பின்புறத்தினை உற்றுநோக்கினால் மெல்லிய நூலாம்படையும் அதனுள் சிவப்பு நிற சிறிய பூச்சிகள் மெதுவாக நகர்வதையும் காணமுடியும்.உருப்பெருக்கி கொண்டு பார்த்தால் அப்பூச்சிகள் எட்டுக்கால்கள் கொண்டனவாக இருப் பதினைக் கவனிக்க இயலும். இப்பூச்சிகள் செவ்வுண்ணி என்றும் அழைக்கப்படும். தாக்குதல் தீவிரப்பட்டால், இலைகள் முற்றிலும் வெளுத்து காய்ந்து கீழே உதிர்ந்துவிடுகின்றன. வறண்ட வெப்பமான சூழ்நிலையில் செஞ்சிலந்தி தாக்குதல் குறையும். செஞ்சிலந்திப் பூக்களைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று கிராம் வீதம் நனையும் கந்தகம் மருந்தினைக் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால், பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் தெளிக்க வேண்டும். பயிரின் வளர்ச்சியினைப் பொறுத்து ஏக்கருக்கு 200 முதல் 300 லிட்டர் வரை மருந்துக் கரைசல் தேவைப்படலாம். இலையின் அடிப்புறமும் படும்படி தெளிக்கவேண்டும்.எம்.ஞானசேகர்,விவசாய ஆலோசகர், 97503 33829.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !