உள்ளூர் செய்திகள்

பயிர் பாதுகாவலன்

நம் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நிறைய பாதிப்பிற்கு உள்ளாகிறது. அதில் ஒரு பாதிப்பாக பூச்சித் தாக்குதல் இருக்கிறது. இந்த பூச்சித் தாக்குதலை இயற்கை முறையில் தவிர்க்க நொதித்த ஆமணக்கு கரைசலை பயன்படுத்தலாம்.கரைசல் தயாரிப்பு: 5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண்பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். பின் 10 நாட்கள் கழித்து இந்த கலவையில் இருந்து துர்நாற்றம் தோன்றும்.பயன்படுத்தும் முறை: 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவையுடன் 3 லிட்டர் நீர் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறாக ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும். தென்னந்தோப்பு, பாக்குத்தோப்புகளில் மரத்தின் அருகே புதைத்து வைத்தால் பூச்சிகள் பானையை நோக்கி வந்து விழுந்து அழிந்து விடும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பூச்சிகளை துாக்கி எறிந்து விட்டு மீண்டும் அதே கரைசலை பயன்படுத்தலாம்.கட்டுப்படும் பூச்சிகள்: கூன் வண்டு, சாம்பல் நிற வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளும், பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களின் சாம்பல் நிற வண்டையும் எளிதில் கட்டுப்படுத்தலாம். சிறுதானிய பயிர்களில் இக்கரசைலை பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிக்கும். எலிகளின் நடமாட்டம் குறைவாக இருக்கும். தொடர்புக்கு 94435 70289.- எஸ்.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர்அருப்புக்கோட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !