உள்ளூர் செய்திகள்

செம்மண் நிலத்திலும் கருடன் சம்பா நெல் சாகுபடி

செம்மண் நிலத்தில், கருடன் சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது: பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், செம்மண் நிலத்தில் கருடன் சம்பா என்ற பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். இது, 135 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். இந்த கருடன் சம்பா ரக நெல், சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும். பாரம்பரிய ரக நெல்லை, ரசாயன உரங்கள் இன்றி, இயற்கை உரங்கள் போட்டு சாகுபடி செய்யும்போது, குறைந்த நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும். இந்த நெல்லை அரிசி மற்றும் மாவாக மதிப்பு கூட்டும்போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும். குறிப்பாக, கருடன் சம்பா ரக நெல் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சாகுபடி செய்வதற்கு உகந்த ரகம் என்று கூறலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !