உள்ளூர் செய்திகள்

அறுவடைக்கு பின்னும் மகசூல் தரும் ஒடிசா பால் தண்டுக்கீரை

ஒடிசா பால் நிற தண்டுக்கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:பாரம்பரிய ரக காய்கறி, கீரை உள்ளிட்ட பலவித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.அந்த வரிசையில், ஒடிசா மாநிலத்தில் அதிகமாக சாகுபடி செய்யப்படும் பால் நிற தண்டு கீரை சாகுபடி செய்துள்ளேன். இது, 60 நாளில் அறுவடை செய்யலாம். இந்த ரகத்தில், நோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நீர் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நிர்வாகத்தை முறையாக கையாண்டால், பால் தண்டு கீரை, அறுவடை செய்ய செய்ய கீரை முளைத்துக் கொண்டே இருக்கும்.இது, நம்மூர் தண்டு கீரை, 90 நாளில் மகசூலுக்கு வரும். உயரமாக வளரும் தன்மை கொண்டது. ஒடிசா பால் நிற தண்டு கீரை குட்டை ரகமாகும்.குறிப்பாக, 10 சென்ட் நிலத்தில், 10,000 ரூபாய் வரையில் வருவாய் ஈட்டலாம். ஒரு ஏக்கருக்கு, ஒரு லட்ச ரூபாய் வரையில், 60 நாட்களில் வருவாய் கிடைக்கும். இது, நெல் மற்றும் காய்கறிகளைக் காட்டிலும், கூடுதல் வருவாய்தான்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:பி.குகன், 94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !