தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு
மதுரை மாவட்டம் பூஞ்சுத்தியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை செயல்படுகிறது. தோட்டக்கலை பயிர் வளர்ப்பு குறித்த கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் ஏப்.,20 முதல் மே 31 வரை நடக்கிறது. இதில் தோட்டக்கலை பயிர்கள் வளர்க்கும் முறைகள், வீட்டிலேயே அலங்கார செடிகள் வளர்ப்பது, வீட்டைச்சுற்றி தோட்டம் அமைத்தல், செடிகள் ஒட்டுக்கட்டும் பயிற்சி, மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். ஒரு பயிற்சி வகுப்பு மூன்று நாட்கள் கொண்டது. அரசு கட்டணம் 300 ரூபாய். பயிற்சியின் போது ஊட்டச்சத்து பானம், பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ், செடிகள் வழங்கப்படும். தொடர்புக்கு 80561 85081.- கோ. பூபதி, துணை இயக்குனர்தோட்டக்கலைத்துறை, மதுரை.