உள்ளூர் செய்திகள்

பந்தல் முறை அவரையில் நோய் தாக்குதல் குறைவு

செடி மற்றும் கொடி அவரை சாகுபடி செய்வது குறித்து, காஞ்சி புரம் மாவட்டம், காவாந்தண்டலம்கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடிசெய்துள்ளேன். அனைத்து விளைப்பொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைப்பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், பெங்களூரு பந்தல் முறைமற்றும் நிலத்தில் பாத்தி முறையில் அவரைக்காய் சாகுபடி செய்துள்ளேன்.பாத்தி முறையில் சாகுபடி செய்யும் அவரைக்காயை காட்டிலும், பந்தல் முறையில் சாகுபடிசெய்யும் அவரைக்காய் அதிக மகசூல் கிடைக்கிறது.குறிப்பாக, விளை நிலத்தில் சாகுபடி செய்யும் அவரைக்காய் நோய் தாக்குதல் ஏற்படும். கொடியில் சாகுபடி செய்யும் அவரைக்காய் நோய் தாக்கம் இன்றி மகசூல் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: சு.ரமேஷ்,81109 44475.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !