காட்டுப்பாக்கத்தில் இன்று முயல் வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று, முயல் வளர்ப்பு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த இருவித பயிற்சிகளுக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நேரடியாக பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: - முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,காட்டுப்பாக்கம். 99405 42371.