சிறப்பு பயிற்சி
முயல் வளர்ப்பு: முயல் வளர்ப்பு குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 25ம் தேதி முயல் வளர்ப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொலைபேசி எண்: 044 - 27264019மீன் வளர்ப்பு: காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நன்னீரில், இறால் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் இனப்பெருக்க மேலாண்மை குறித்து, இன்று, பயிற்சி நடைபெற உள்ளது.செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நன்னீரில் இறால் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் இனப்பெருக்க மேலாண்மை குறித்து, இன்று, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நீர் மேலாண்மை: பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நெல் மற்றும் வேர்க்கடலை பயிரில், மண் மற்றும் நீர் மேலாண்மை குறித்து, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம். தொடர்புக்கு: 044 - 27452371