"வாடல் நோயில் இருந்து பருத்தியை காக்க
பருத்தி பயிரை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானது 'வெர்டிசில்லியம்' என்னும் வாடல் நோய். இது பாதித்தால், செடிகளில் இலைகளின் நரம்புகள் பச்சையாகவும், மற்ற பகுதிகள் மஞ்சளாகவும் மாறும். மஞ்சள் நிறப்பகுதி வாடி கருகிவிடும். எனவே இலை புலிவரிக்கோடுகள் போல தோன்றும். பின் இலைகள் காய்ந்து உதிரும். படிப்படியாக செடிகள் காயும்.பருத்தி விதைக்கு முன் ஆழமாக கோடை உழவு செய்து நோய்க்காரணிகளை சூரியனின் வெப்பத்திற்கு உட்படுத்தி அழிக்க வேண்டும். விதைக்கும் முன் எக்டேருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். தொழு உரம் எக்டேருக்கு 12.5 டன் இடவேண்டும்.விதையை நேர்த்தி செய்கையில், விரிடி என்ற உயிர் பூஞ்சானக்கொல்லி 4 கிராம் அல்லது கார்பன்டைசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம், ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.நோய் தாக்கியபின்: நோய் தாக்கியபின் என்றால் பூஞ்சானக் கொல்லி ஒரு கிராம் பவுடர் ஒருலிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து நோய் தாக்கப்பட்ட செடிகளின் வேரைச்சுற்றி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும். நோய் தாக்கிய செடியின் அருகில் உள்ள மற்ற செடிகளுக்கும் ஊற்ற வேண்டும். மேற்கண்ட முறைகளை கையாண்டு இந்த வாடல் நோயில் இருந்து பருத்திச் செடியை காக்கலாம். மகசூலையும் பெருக்கலாம்.கி.ராஜேந்திரன்,வேளாண்மை துணை இயக்குனர், மதுரை.