உள்ளூர் செய்திகள்

பயிர்களை தாக்கும் நோய்கள் தடுப்பது குறித்து 11ல் பயிற்சி

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பாரம்பரிய முறையில், பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை தடுப்பது குறித்து, ஒரு நாள் பயிற்சி, வரும் 11ம் தேதி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,காட்டுப்பாக்கம். 99405 42371.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !