உள்ளூர் செய்திகள்

விதைப்போம் மறப்போம் முறையில் பாரம்பரிய ரக நெற்பயிர்

செம்மண் நிலத்தில், விதைப்போம் மறப்போம் முறையில், பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:செம்மண் நிலத்தில், பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மணி சம்பா, ரத்தசாலி ஆகிய பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன்.பொதுவாக, பாரம்பரிய ரக நெல்லை பொறுத்தவரையில், களிமண் நிலம் மற்றும் ஏரி சவுடு மண் நிலத்தில் சாகுபடி செய்யலாம். செம்மண்ணில், காய்கறி மற்றும் பயறு வகைகள் மட்டுமே, சாகுபடி செய்ய முடியும்.முதல் முறையாக, செம்மண் நிலத்திலும் பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். நெற்பயிரும் நன்றாக வளருகிறது. களிமண்ணில் கிடைக்கும், மகசூல் பெற முடியும் என, நம்பிக்கை பிறந்துள்ளது.குறிப்பாக, 'விதைப்போம், மறப்போம்' என்ற கொள்கையின் அடிப்படையில், விதை நெல்லை விதைத்ததோடு சரி, உரம், களை எடுக்கவில்லை. பராமரிப்பு என்பது அறவே இல்லை. இருப்பினும், நெற்பயிர் நன்றாக வந்துள்ளது. மகசூலுக்கு பிறகே தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !