உள்ளூர் செய்திகள்

சத்துக்கள் நிறைந்த இளஞ்சிவப்பு அவரைக்காய்

மணல் கலந்த களிமண் நிலத்தில், இளஞ்சிவப்பு நிற அவரைக்காய் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:காய்கறி, கீரை உள்ளிட்டவற்றை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.மணல் கலந்த களிமண் பூமியில், பலவித அவரைக்காய் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். மணல் கலந்த களிமண்ணுக்கு இளஞ்சிவப்பு நிற அவரைக்காய் நன்றாக வருகிறது.குறிப்பாக, மற்ற ரக அவரைக்காயில், ஒரு காம்பில் நான்கு அவரைக்காய்கள் வரையில் காய்க்கும். இந்த இளஞ்சிவப்பு நிற அவரைக்காயில் ஒரு காம்பிற்கு ஒரு காய் மட்டுமே காய்க்கும்.அதிக சத்து நிறைந்து இருப்பதால், பிற அவரைக்காய் காட்டிலும் மகத்துவம் வாய்ந்தது.இளஞ்சிவப்பு நிற அவரைகாய் நிறத்தில் வித்தியாசமாக இருப்பதால், சந்தையில் கூடுதலாக விலை கொடுத்தும் வாங்க தயக்கம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- பி. குகன்,94444 74428.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !