இனிப்பு சுவைக்கு தல்ஹாலி ஜாம்பக்காய்
தல்ஹாரி ஜாம்பக்காய் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு விதமான பழ மரங்களை நட்டுள்ளோம். அந்த வரிசையில், தல்ஹாரி ஜாம்பக்காய் சாகுபடி செய்துள்ளோம்.இது, தாய்லாந்து ரகத்தைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிற வாட்டர் ஆப்பிளாகும். இதில், வைட்டமின் சி நிறைந்த நீர் சத்து மற்றும் இனிப்பு சுவையுடன் இருக்கும்.விளை நிலம் மற்றும் மாடி தோட்டத்திலும், சாகுபடி செய்யலாம். கோடை காலத்தில் இந்த பழங்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,98419 86400.