உள்ளூர் செய்திகள்

கூடுதல் வருவாய் தரும் குறுவை களையான் நெல்

குறுவை களையான் சம்பா நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:பாரம்பரிய ரக நெல்லில், குறுவை களையான் சம்பா ரக நெல் தனியாகும். இது, கோடைகால தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப, 85 நாட்களில் விளைச்சல் தரக்கூடியது. குறுவை பருவ காலத்திற்கு ஏற்ற ரகமாகும்.இந்த, நெல் மஞ்சள் நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லில், இயற்கையாவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இருக்காது.ஒரு ஏக்கருக்கு, 22 மூட்டை நெல் மகசூல் பெறலாம். இந்த ரக நெல்லை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, கூடுதல் வருவாய் கிடைக்கும். குறிப்பாக, குறுவை களையான் ரக நெல், மோட்டா ரகமாக இருந்தாலும், அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கக்கூடிய ரகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர், என்.மகாலட்சுமி98414 42193.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !