உள்ளூர் செய்திகள்

மண்ணில்லாத விவசாயத்தில் மலேசியன் மஞ்சள் ரக தென்னை

மண்ணில்லாத விவசாயத்திலும், மலேசியன் மஞ்சள் ரக தென்னை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், மண்புழு உரம், மரத்துாள் ஆகியவை பயன்படுத்தி காய்கறி செடி வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மலேசியன் மஞ்சள் ரக தென்னை சாகுபடி செய்கின்றனர்.இந்த ரக இளநீர் தென்னை கொப்பரைக்கு உதவாது. இளநீர் வருவாய்க்கு மட்டுமே உகந்தது. சந்தையில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.தனஞ்செயன்,88257 46684.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !