கணிசமான வருவாய்க்கு வெள்ளை மிளகு சம்பா ரக நெல்
வெள்ளை மிளகு சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிரா மத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகைகளை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பாரம்பரிய வெள்ளை மிளகு சம்பா ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன்.இது, 120 நாட்களுக்கு பின் அறுவடைக்கு தயாராகும். அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்யக்கூடிய சிறந்த ரகம்.இந்த ரக நெல், மஞ்சள் நிறத்தில் குண்டாகவும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.மேலும், கதிர் நாவாய் பூச்சி, தண்டு துளைப்பான், குலை நோய் எதிர்ப்பு திறன் உடையது. இந்த நெல்லை அரிசி மற்றும் மாவாக மதிப்பு கூட்டும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968.