பறவை காய்ச்சல் 54 மயில்கள் பலி
துமகூரு: துமகூரில் பறவை காய்ச்சலால் கடந்த 30 நாட்களில், 54 மயில்கள் உயிரிழந்து உள்ளன. துமகூரு மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் உயிரிழக்கும் மயில்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த 30 நாட்களில் 54 மயில்கள் உயிரிழந்து உள்ளதாக வனத்துறை தெரிவித்து உள்ளது. பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு கால்நடை பராமரிப்பு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், மாவட்டம் முழுதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வன விலங்குகள், பறவைகளின் இறப்பு குறித்து வனத்துறையினர் உடனடியாக தெரிவிக்குமாறு கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டு உள்ளது. அதே சமயம், பறவை காய்ச்சலால் கோழிகளுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பலரும் கோழிக்கறி சாப்பிட அஞ்சுகின்றனர். இதனால், கோழிக்கறி விற்பனை குறைந்து உள்ளது.