உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹிமாச்சல பிரதேசத்துக்கு கர்நாடகா ரூ.5 கோடி நிதி

ஹிமாச்சல பிரதேசத்துக்கு கர்நாடகா ரூ.5 கோடி நிதி

பெங்களூரு : வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள, ஹிமாச்சல பிரதேச மாநிலத்துக்கு, கர்நாடக அரசு உதவிக்கரம் நீட்டுகிறது. இது குறித்து, அம்மாநில முதல்வர் சுகவிந்தர் சிங்குக்கு, முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதம்: சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலர் பலியாகினர். பெருமளவில் சொத்துகள் சேதமடைந்தன. இத்தகைய நெருக்கடியான நேரத்தில், கர்நாடக மக்கள் ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு ஆதரவாக நிற்பர். இதற்கு அடையாளமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 5 கோடி ரூபாய் நிதி வங்கப்படும். இயற்கை சீற்றங்கள் நடக்கும் போது, மாநிலங்கள் ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும். எனவே ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பால் அவதிப்படும் மக்களுக்கு, கர்நாடக காங்., அரசு தோள் கொடுத்து துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை