2,000 சந்தன மரங்கள் திருட்டு மாகடி விவசாயிகள் வேதனை
ராம்நகர்: மாகடியில் விவசாய சகோதரர்கள் விளைவித்திருந்த 2,000 சந்தன மரங்களை, திருடர்கள் வெட்டி சென்றுள்ளனர். விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.ராம்நகர் மாவட்டம், மாகடி தாலுகாவின் அத்திங்கெரே கிராமத்தில் வசிப்பவர் விவசாயி பஞ்சலிங்கையா. இவரது சகோதரர் மஹாலிங்கையா. இவர்கள் சோமக்கன மடம் அருகில் 12 ஏக்கர் நிலத்தில், 10 ஆண்டுகளாக சந்தன மரங்கள் வளர்க்கின்றனர்.சகோதரர்கள் சந்தன மரங்களை, அரசு சார்ந்த மைசூரு சாண்டல் சோப் தொழிற்சாலைக்கு விற்பது குறித்து, ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். நிலத்தில் 4,000க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் இரவு மர்ம கும்பல் நிலத்தில் புகுந்து, 2,000 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாயாகும்.பெருமளவில் நஷ்டம் அடைந்த விவசாயிகள், மாகடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும், திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.மாகடி தாலுகா பகுதிகளில், சந்தன மர திருடர்கள் அதிகம். நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, மரங்களை வெட்டி செல்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தும்படி, விவசாயிகள் மன்றாடுகின்றனர்.