உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு

 பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு

பெங்களூரு: பருவநிலை மாற்றம் காரணமாக, பெங்களூரில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெங்களூரில் நிலவும் வானிலை காரணமாக, குழந்தைகள், முதியோருக்கு காய்ச்சல், சுவாச நோய் தொற்றுகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் 571 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 344 பேருக்கு கடுமையான சுவாச தொற்று; 3,232 பேருக்கு வயிற்று போக்கு கண்டறியப்பட்டு உள்ளது. இது தவிர, பெங்களூரில் குழந்தைகள் இடையே வைரஸ் காய்ச்சல் வழக்கத்தை விட, 15 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. குழந்தைகளை கண்காணிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்