உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நேரடி விற்பனை துறை வருவாய் ரூ.22,000 கோடி தாண்டியது

நேரடி விற்பனை துறை வருவாய் ரூ.22,000 கோடி தாண்டியது

புதுடில்லி:'டைரக்ட் மார்க்கெட்டிங்' எனப்படும் நேரடி விற்பனை துறையின் வருவாய் 22,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதுடன், நேரடி விற்பனையாளர்கள் 88 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், ஐ.டி.எஸ்.ஏ., ஆண்டு கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து, ஐ.டி.எஸ்.ஏ., எனப்படும் இந்திய நேரடி விற்பனை சங்கம் தெரிவித்துள்ளதாவது: நிலையான வளர்ச்சியுடன் முன்னேறி வரும் நேரடி விற்பனை துறை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 7.15 சதவீதம் கூட்டு வளர்ச்சியுடன், 2019 - 20ம் நிதியாண்டில் 16,800 கோடி ரூபாயில் இருந்து, 2023 - 24ம் நிதியாண்டில் 22,142 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. மேலும், செயலில் உள்ள நேரடி விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் 2024ம் நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் 86 லட்சத்தில் இருந்து, 88 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெண்களின் எண்ணிக்கை 44 சதவீதமாக உள்ளது. இது, 2023ம் நிதியாண்டில் 37 சதவீதமாக இருந்தது. இது, தொழில் துறையில் பெண் தொழில்முனைவோரின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் பங்களிப்பு சதவீதம்

மஹாராஷ்டிரா 13மேற்கு வங்கம் 11.30உத்தர பிரதேசம் 10பீஹார் 6.20கர்நாடகா 5.70

பகுதி விற்பனை சதவீதம்

வடக்கு 29.80கிழக்கு 24.20மேற்கு 22.40தெற்கு 15.30வடகிழக்கு 8.30

பிரிவு மொத்த விற்பனை சதவீதம்

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் 64.15அழகு சாதனம் மற்றும் தனிநபர் பராமரிப்பு 23.75வீட்டு உபயோக பொருட்கள் 3.10


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை