ஹெக்ஸாவேர் இந்தியாவுக்கு புதிய தலைவர்
சென்னை, : தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக ஆதித்ய ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், புதிய நிறுவனங்களை உருவாக்கி மேம்படுத்துதல் என்று பல துறைகளில் 25 ஆண்டு அனுபவம் பெற்றவர் ஆதித்ய ஜெயராமன். திருச்சியில் உள்ள என்.ஐ.டி.யில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்த இவர், ஐ.ஐ.எம்., கொல்கட்டாவில் எம்.பி.ஏ. படித்துள்ளார்.