உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மியூச்சுவல் பண்டு: ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு

மியூச்சுவல் பண்டு: ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு

உலகளாவிய நிச்சயமற்ற சூழல், சந்தை மதிப்பு குறித்த கவலைகள் மற்றும் நிறுவனங்களின் மந்தமான வளர்ச்சிக்கு மத்தியில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், முதலீடு அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் காலாண்டில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு, முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில், 19 சதவீதம் அதிகரித்து, 2,02,496 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. கடந்த ஜூன் காலாண்டில், 1,70,297 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. புதிய பண்டு திட்டங்கள் மற்றும் வலுவான, முறையான முதலீடு ஆகியவை, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், முதலீட்டை நிலையாக வைத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ