உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஆப் ஷ ன்ஸ் குழப்பங்களுக்கு தீர்வு தர கருத்தரங்கம்

 ஆப் ஷ ன்ஸ் குழப்பங்களுக்கு தீர்வு தர கருத்தரங்கம்

ப ங்கு சந்தை வர்த்தகத்தில் ஆப்ஷன்ஸ் தொடர்பான குழப்பங்களுக்கு விடை தரும் நோக்கில் 'மார்க்கெட் அகாடமி' நிறுவனம், மதுரையில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி 'முதலீட்டாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026' நிகழ்ச்சியை நடத்துகிறது. தல்லாகுளத்தில் உள்ள லஷ்மி சுந்தரம் ஹாலில் நடைபெறும் கருத்தரங்கில், 'என்ரிச் மனி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., பொன்முடி ஆர், ஜீ தமிழில் தொலைக்காட்சியின் தமிழா தமிழா நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவுடையப்பன், கான்பெரோ வென்ச்சர்ஸ் நிறுவனர் நாகராஜ் பாலசுப்ரமணியம், ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் மூத்த வழக்கறிஞர் கலையரசன் கதிர், மார்க்கெட் அகாடமி இணை நிறுவனர் செல்லா, சேரன் அகாடமி நிறுவனர் ஹுசைன் அகமது' உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முதலீட்டாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளனர். இந்திய நிதி சந்தையில் பொறுப்பான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் தொடர்பான நிபுணர்கள் வழிநடத்தும் அமர்வுகள், அனுபவம்மிக்க சந்தை வல்லுநர்களிடமிருந்து நடைமுறை சார்ந்த பயனுள்ள தகவல்கள், டிரேடிங் உத்திகள் மற்றும் இடர் மேலாண்மை குறித்த விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்