மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
நேற்றைய தினம், பங்கு சந்தைகள் அதிகமான ஏற்ற இறக்கத்துடன் இருந்து, இறுதியில் சரிவைக் கண்டன. நிப்டி, எந்த மாற்றமும் இல்லாமல், முந்தைய தின முடிவு எவ்வாறு இருந்ததோ, அதே புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 0.06 சதவீதம் சரிவுடன் நிறைவடைந்தது தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதும், அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததும், இறக்கத்துக்கு வழிவகுத்தது ஓட்டளித்தவர்கள் சதவீதம் குறைந்தது, ஆசிய சந்தைகளின் இறக்கம் ஆகியவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைப்பதாக அமைந்ததும், சந்தை சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது இவை போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடனேயே சந்தையை அணுகி வருகின்றனர் உலக கச்சா எண்ணெய் சந்தையில், நேற்று ஒரு பேரலின் விலை 1.65 சதவீதம் சரிந்து, 81.79 டாலராக இருந்தது இந்திய பங்கு சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், செவ்வாயன்று 3,669 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, பெரிய மாற்றம் ஏதுவுமின்றி, 83.51 ரூபாயாக இருந்தது.
முந்தைய முடிவு : 22,302.50நேற்றைய முடிவு: 22,302.50மாற்றம்: 0.00 மாற்றமில்லை
முந்தைய முடிவு: 73,511.85நேற்றைய முடிவு: 73,466.39மாற்றம்: 45.46 இறக்கம் சிவப்பு
ஹீரோ மோட்டோகார்ப் பி.பி.சி.எல்., டாடா மோட்டார்ஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஹிண்டால்கோ
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ஏசியன் பெயின்ட்ஸ் கிராஸிம் அல்ட்ராடெக் சிமென்ட் எச்.யு.எல்.,
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 54% இறக்கம் கண்டவை : 42%மாற்றம் காணாதவை: 4%
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025